search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்கர் கிங் கடை"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல ‘பர்கர் கிங்’ கடையில் வாடிக்கையாளர் ஒருவர், பர்கர் சாப்பிட்டபோது கண்ணாடி துண்டுகள் இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பூனே:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் சஜீத் பதான்(31). இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் பிரபல  ‘பர்கர் கிங்’ கடையில் பர்கர் சாப்பிட சென்றுள்ளார்.

    அனைவரும் விருப்பமான பர்கர் வகையை ஆர்டர் செய்தனர். நண்பர்களுடன் பேசிக்கொண்டே பர்கரை சஜீத் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நொடிகளிளேயே அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அருகிலிருந்த நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உடனடியாக சஜீத் சாப்பிட்ட பர்கரை செக் செய்துள்ளனர்.



    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சிறு சிறு கண்ணாடி துண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த துண்டுகள் சஜீத்தின் தொண்டைக்குள் சிக்கியதால்தான் அவருக்கு வலி மற்றும் ரத்தம் வந்துள்ளது என கண்டறிந்தனர்.

    இதனையடுத்து சஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல் நலம் தேறியுள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.




     

     
    ×